Tuesday, August 25, 2009

மறக்க முடியுமா??


கிட்டி அடித்ததும்

கிளித்தட்டு மறித்ததும்

பட்டியில் சுட்டியனைக்

கட்டிப் பால் கறந்து குடித்ததும்

வளவுப் புட்டியில்

பனம் கிழங்கு புடுங்காமல்

விட்டதனால்

குஞ்சியப்பு எனைக்

கொடுக்கோடு கலைத்ததும்

அம்மாவைக் கட்டிபு பிடித்து

விளையாடும் போது

காளையது எட்டியுதைத்ததும்

குட்டி போட்ட நாய்க்கு

கல்லெறிந்து - அது

கோபங்கொண்டு எனைக்

குரைத்துக் கடித்ததும்

கோவில் திருவிழாவில்

புக்கை வேண்டுவதர்க்காய்

சக்கரையக்கா மகளோடு

சண்டை பிடித்ததும்

நித்திரை கொள்ளாமல்

சின்னத்திரையில் படம் பார்த்துத்

திரிந்ததும் இத்திரையில்

இப்போதும் எனக்குள்

ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்பு.


அப்புவுக்கு

இங்கிருந்து சுப்பு எழுதுவது.

எப்படியணை இருக்கிறியள்??

இப்பவும் திண்ணை தானா???

அந்த மண்ண

நா விட்டு வந்து- இங்கு

கொண்ணையுடன்

சேர்ந்து இருக்கன்.

உண்ணாணச்

சொல்லிவிட்டன் - இது

உதவாத ஊரப்பு .

அப்பனைப்

பிள்ளையும் பாரான்.

ஆத்தாளை

மேய்ப்பார் நாய்போல்

காத்தால வெளிக்கிட்டால்

கள்ளர் போல்

இரவுதான் வாறார்.

பார்த்தாலோ கேட்டாலோ

பைத்தியமா என்பார்.. ?

கூப்பிட்டதற்காக

உங்களைப் பார்க்குறம்.

கூப்பாடு போட்டால்

கொண்டே போடுவம்

எண்டல்லோ வெருட்டினம்.

Monday, August 24, 2009

பானுமதி.


தேவதையே பானுமதி தெரிகிறதா????

என் இதயவலி

நீயும் என் காதல் நதி - அதில்

நீந்துகின்றேன் தன்னம் தனி- உன்

பேச்சு மொழி அழகினிலே - இப்போ

மூச்சைடைத்துப் போகின்றேன்.

உன்னழகு சிரிப்பு ஒலி - என்

உச்சிவரை இன்பவலி.

நேற்று வரை நினைத்திருந்தேன்

நின்மதியே இல்லையென்று - ஆனால்

பானுமதி உன்னாலே - நான்

முழுமதியாய் ஆகிவிட்டேன்.

அன்பான அரவணைப்பு - உன்

கரும் கூந்தல் தனியழகு

கருவிழிகள் கொவ்வையிதழ்,

கட்டுடல் உன் மேனி - அதை

தொட்டுவிட நினைக்கின்றேன் - உள்ளத்தை

உன்னை அல்ல.

உணக்குள்ளே செத்துவிடத் துடிக்கின்றேன்

உறவுடைய நாள் வரைக்கும் -உன்

உதட்டசைவு ஒலி கேட்டு - என்

உயிர் எங்கோ சென்று வரும்- உன்

மனத்தழகு நான் பார்த்து

மரணிக்கத்தான் சொல்லும்.

சங்குவரி கழுத்தழகு - அதில்

தாலி கட்டத் தான் சொல்லும்-உன்

நெஞ்சழகு நினை உற்று - என்

நின்மதியைத் தான் கொல்லும்.

இடுப்பழகு நான் பார்த்து -காதல்

போர் தொடுக்கத் தான் சொல்லும்- உன்

நடையழகு நான் கண்டு - பெரும்

படையெடுக்கத்தான் சொல்லும்.

முற்றுப்புள்ளி.


புள்ளி ஒன்று வைத்திருந்தேன்.

உணக்கும் எனக்கும் இடையே

நீ எனை நெருங்கும் போது

அது ஆச்சரியக்குறியானது!!!!!!!!!!!!!!

உனைத் தொட்டுப்பார்க்க

நினைத்ததினால் என் வாழ்க்கை

இப்போ கேள்விக்குறியானது???????

சற்று நான் தள்ளி இருந்திருப்பின்

நீ எனை மேற்கோள்குறி ஆக்கியிருப்பாய்"""""""""

கட்டுப்பாடு அற்றதனால்

இப்போ நீ இட்டாய் முற்றுப்புள்ளி.....

இதனால் தான் எமக்குள்ளே இடை-------வெளி.

கேள்வி.


என்னுயிர் இராட்சசிக்கு - உன்னால்

இதயத்தில் வலி பெற்றவன்

எழுதுகின்றேன்.

நேற்றிரவு நீ எனைக்

கூப்பிடுவதாக உணர்ந்தேன்.

திடுக்கிட்ட்டு கண்விழித்த போது- தான்

தெரிந்தது.

கனவு கூட கண்ணீர் வடித்தது.

ஓர் இரு ஆண்டா

உன்னை நான் காதலில் கண்டது??

உன் அறிமுகப்

பரீட்சையில் தேர்வடைந்த நான் -

எப்படி அடிமனத்திடையில்

எடுபடாமல் சென்றேன்????

Saturday, August 22, 2009

கண்ணீர்.


பெண்ணே
உன் கண்ணசைவிற்காக
காத்திருந்து காத்திருந்து
பார்வை இழந்தபின் தான்
எனக்குத் தெரிந்தது.
நான் ஒரு
பயித்தியக்காரன் என்பது.

உன் பெயரின் முதல் எழுத்தையே
என் முதுகெலும்பாய் எண்ணி வாழ்ந்து
கூன் விழுந்து போனேன்.
இப்போது தான்
எனக்குப் புரிந்தது
நான் ஒரு
முதுகெலும்பே இல்லாதவன் என்பது.

காதல் குழந்தையை சுமந்து சுமந்து
களைத்துப் போய்
கருத்தரித்தபோது
கண்ணீர்க் குழந்தை அல்லவா
எனக்குக் கிடைத்க்டிருக்கிறது.

எனது வருத்தம்

பரமபிதவிடம் போய் நான்
பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியர்களுக்கு அந்தக் கடவுள்
கண்களைக் கொடுத்ததர்க்காக.

உலகத்தின் சுவர்கள் எல்லாம்
உயர்ந்து உயர்ந்து
போன போதும் - எங்கள்
இதயத்தின் சுவர்களை
இன்னும் -நீங்கள்
இடித்துக்கொண்டிருக்கிறீர்களே
எதற்காக??

உனது கால்களுக்குக்
கோவில் கட்டுவேன் என்று
கத்திக்கொண்டிருந்தேன்
இப்போது - எனக்கு
வாயிருப்பதர்க்காகவே வருத்தப்படுகிறேன்.

ஒரு தலைக் காதல்.

கனவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருதலைக் காதலன் நான்.

நீ அறிய மாட்டாய்
நான் இங்கு
நெருப்புக்குள் வாழ்வது.

பொசுங்கிக் கொண்டிருக்கின்றேன்.
நீ ஒளி தர வேண்டும்
என்பதர்க்காய்.

எனது குருதி நாளங்கள்
கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.
ஏன் என்றால்
எமது
காதல் சுற்றோட்டத்தை
சுத்திகரிப்பதர்க்காய்.

எனக்குத் தெரியும் - நீ
எனக்குள் தான்
இருக்கின்றாய் என்று
ஆனால்
இதுவரையும் - நீ
அறிந்திருக்க மாட்டாய் - நான்
உணக்குள் இருப்பது
இது தான் ஒரு தலைக்காதல்.

தவிப்பு.

இழந்து விட்ட உணக்காக
இருந்து நான் அழுவதும்
ஏங்கித் தவிப்பதும்
இந்த நூற்றாண்டில்
இல்லாமல் போயாச்சு.

வண்டொன்று பூவருடி
தேன் சேர்த்த காதல் இது.
எங்கெங்கே சென்றாலும் - நீ
என்னோடு தானிருப்பாய்.
என்றெண்ணித் தானே
இது வரையும் - நான்
இருந்தேன்
ஆனால்
கன்றொன்றின் மேலேறிய - தேர்
போலாச்சு என் காதல்.

உனைப் பெண் பார்க்க
வரும் போது
பேசாமலா இருந்தாய்??? - சொல்
என்னை நீ
எண்ணாமல்
ஓம் என்று ஏன் சொன்னாய்......?????????

அந்நிய நாடு

அன்புள்ள நண்பனுக்கு.
அந்நிய நாட்டில் இருந்து- ஒரு
அனாதையின் குரல்,
இந்த மண்ணின் மனிதப் பறவைகளோடு
நானும்
இந்த மண்ணில் பறந்து கொண்டிருக்கின்றேன்.
உன்னோடு வந்து கலந்து விட என்
உள்ளம் துடித்தாலும்
என் காற்சிறகுகள் சற்றும்
களைப்பாறி விடுவதில்லை.
உன்னோடு வந்து என் உண்மை
கதை பேச
இருந்தாலும் ஒருசில
என் கண்ணீர்த்துளிகளை
உன் கைகளுக்கு தருகின்றேன்.
அழகான் வீடு - அதில்
அமர்ந்திருக்க யாரும் இல்லை.
ஆயிரம் வடிவங்களில் பஞ்சு மெத்தைகள்
அதில் படுத்துறங்க எங்களிற்கு நேரம் இல்லை.
அக்கமும் பக்கமும் அயலவர்கள்
அவர் யார் என்று இதுவரை பார்த்ததில்லை.
நித்தமும் நித்தமும் கண்விழித்து - நான்
நிரப்பிய வங்கிகள் கொஞ்சம் இல்லை.
உற்றமோ சுற்றமோ என்றுமில்லை- நாம்
உறவென்று சொல்லிட யாருமில்லை.
பட்டமும் பதவியும் பார்க்கவில்லை - இங்கு
பணம் சொன்ன சொல்லை யாரும்
மறுக்கவில்லை.
கெட்டவர் நல்லவர் யாரும் இல்லை - சட்டைப்
பைகளில் இல்லையேல்
வாழ்க்கையில்லை.
அப்பனைப் பிள்ளையும் பார்த்ததில்லை - அவன்
யார்?? என்று கேட்கவும் நேரம் இல்லை.
அன்னையை தந்தையை அணைத்ததில்லை - இங்கு
அன்பையும் பண்பையும் அறிந்ததில்லை.
வள்ளலும் வழங்கலும் எமக்குள் இல்லை - நல்ல
கொள்கையோ குறிக்கோளோ எவர்க்குமில்லை.
உண்ணவும் உடுக்கவும் முடிவதில்லை - அந்த
உயிர்ப்பசி எவர்க்குமே புரிவதில்லை.
அண்ணனும் தம்பியும் நெருக்கமில்லை - அவர்
அரைகுறை உடைகளில் குறைச்சலில்லை.
என்னும் சொல்லலாம் முடிச்சலில்லை - என்
சிறகுகள் துடிக்குது ஓச்சலில்லை.
இத்துடன் முடிக்கிறேன் எனி இரவு வேலை
இனியொரு முறை
இதைத்தொடர்ந்து சொல்வேன்.....
காத்திரு நண்பனே....

Friday, August 21, 2009

அழகி

ஆடல் அழகியே- உன்
எடுப்பான தோற்றத்தில்
இடையைத் தேடினேன்
இருந்தது போல் தெரிந்தது
இப்பொ இல்லாமல் போனது ஏன்?????
நீ.....
ஆடும் போது
அங்க அபினயங்கள்
எனை உன்னில்
அர்ப்பணித்து விட்டது
தேடுகின்றேன் மீண்டும்
உன்னிடையை
அதில் செருகிட நினைக்கின்றேன்
என்னுயிரை.......

கவிதை

எங்கே எனது கவிதை
இது வரை தேடுகின்றேன்
கிடைக்கவில்லை.
ஓடிக் களைத்த பின்பு
ஒரு கணம் உட்கார்ந்து
யோசித்தேன்-அது
ஒழித்து இருந்தது
உன் மனதில்
அடி கள்ளி
ஏனடி அபகரித்தாய்
என் கவியை
ஒரு சொல்லு சொல்லாமல் ஒழித்து வைத்தாய்
உன் மனதில்........

அன்பானவளே.

என் மனத்தோடு- நான்
சண்டையிட்டுக் கொள்கின்றேன்.
என்னை மரணிக்க விடு என்று- ஏனெனில்
என்னால் இப்போது
இயங்க முடியவில்லை- உன்
இனிமையான- அந்த இன்பக்குரல் இன்றி

உன் அன்பான் அரவணைப்புக்காய்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்- இவ்
அப்பாவியைத் தெரிகிறதா.....???????

சிந்தித்துப்பார் பெண்ணே- உன்னை
சினேகிக்க வைத்த தடத்தில்
நானே இறுகுண்டு போனதை
இப்போது சிரிக்கவும் தெரியாமல்
அழவும் முடியாமல்
திசைமாறிக்கொண்டிருக்கின்றேன்.

உன்னால்
மீண்டும் ஓர் இன்ப
இணைப்புக்குள் நான் இப்போ
தயவு செய்து தந்துவிடு
என் மனதை என்னிடமே..........