Saturday, August 22, 2009

அந்நிய நாடு

அன்புள்ள நண்பனுக்கு.
அந்நிய நாட்டில் இருந்து- ஒரு
அனாதையின் குரல்,
இந்த மண்ணின் மனிதப் பறவைகளோடு
நானும்
இந்த மண்ணில் பறந்து கொண்டிருக்கின்றேன்.
உன்னோடு வந்து கலந்து விட என்
உள்ளம் துடித்தாலும்
என் காற்சிறகுகள் சற்றும்
களைப்பாறி விடுவதில்லை.
உன்னோடு வந்து என் உண்மை
கதை பேச
இருந்தாலும் ஒருசில
என் கண்ணீர்த்துளிகளை
உன் கைகளுக்கு தருகின்றேன்.
அழகான் வீடு - அதில்
அமர்ந்திருக்க யாரும் இல்லை.
ஆயிரம் வடிவங்களில் பஞ்சு மெத்தைகள்
அதில் படுத்துறங்க எங்களிற்கு நேரம் இல்லை.
அக்கமும் பக்கமும் அயலவர்கள்
அவர் யார் என்று இதுவரை பார்த்ததில்லை.
நித்தமும் நித்தமும் கண்விழித்து - நான்
நிரப்பிய வங்கிகள் கொஞ்சம் இல்லை.
உற்றமோ சுற்றமோ என்றுமில்லை- நாம்
உறவென்று சொல்லிட யாருமில்லை.
பட்டமும் பதவியும் பார்க்கவில்லை - இங்கு
பணம் சொன்ன சொல்லை யாரும்
மறுக்கவில்லை.
கெட்டவர் நல்லவர் யாரும் இல்லை - சட்டைப்
பைகளில் இல்லையேல்
வாழ்க்கையில்லை.
அப்பனைப் பிள்ளையும் பார்த்ததில்லை - அவன்
யார்?? என்று கேட்கவும் நேரம் இல்லை.
அன்னையை தந்தையை அணைத்ததில்லை - இங்கு
அன்பையும் பண்பையும் அறிந்ததில்லை.
வள்ளலும் வழங்கலும் எமக்குள் இல்லை - நல்ல
கொள்கையோ குறிக்கோளோ எவர்க்குமில்லை.
உண்ணவும் உடுக்கவும் முடிவதில்லை - அந்த
உயிர்ப்பசி எவர்க்குமே புரிவதில்லை.
அண்ணனும் தம்பியும் நெருக்கமில்லை - அவர்
அரைகுறை உடைகளில் குறைச்சலில்லை.
என்னும் சொல்லலாம் முடிச்சலில்லை - என்
சிறகுகள் துடிக்குது ஓச்சலில்லை.
இத்துடன் முடிக்கிறேன் எனி இரவு வேலை
இனியொரு முறை
இதைத்தொடர்ந்து சொல்வேன்.....
காத்திரு நண்பனே....

No comments:

Post a Comment