கனவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருதலைக் காதலன் நான்.
நீ அறிய மாட்டாய்
நான் இங்கு
நெருப்புக்குள் வாழ்வது.
பொசுங்கிக் கொண்டிருக்கின்றேன்.
நீ ஒளி தர வேண்டும்
என்பதர்க்காய்.
எனது குருதி நாளங்கள்
கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.
ஏன் என்றால்
எமது
காதல் சுற்றோட்டத்தை
சுத்திகரிப்பதர்க்காய்.
எனக்குத் தெரியும் - நீ
எனக்குள் தான்
இருக்கின்றாய் என்று
ஆனால்
இதுவரையும் - நீ
அறிந்திருக்க மாட்டாய் - நான்
உணக்குள் இருப்பது
இது தான் ஒரு தலைக்காதல்.
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment