Friday, August 21, 2009

அழகி

ஆடல் அழகியே- உன்
எடுப்பான தோற்றத்தில்
இடையைத் தேடினேன்
இருந்தது போல் தெரிந்தது
இப்பொ இல்லாமல் போனது ஏன்?????
நீ.....
ஆடும் போது
அங்க அபினயங்கள்
எனை உன்னில்
அர்ப்பணித்து விட்டது
தேடுகின்றேன் மீண்டும்
உன்னிடையை
அதில் செருகிட நினைக்கின்றேன்
என்னுயிரை.......

கவிதை

எங்கே எனது கவிதை
இது வரை தேடுகின்றேன்
கிடைக்கவில்லை.
ஓடிக் களைத்த பின்பு
ஒரு கணம் உட்கார்ந்து
யோசித்தேன்-அது
ஒழித்து இருந்தது
உன் மனதில்
அடி கள்ளி
ஏனடி அபகரித்தாய்
என் கவியை
ஒரு சொல்லு சொல்லாமல் ஒழித்து வைத்தாய்
உன் மனதில்........

அன்பானவளே.

என் மனத்தோடு- நான்
சண்டையிட்டுக் கொள்கின்றேன்.
என்னை மரணிக்க விடு என்று- ஏனெனில்
என்னால் இப்போது
இயங்க முடியவில்லை- உன்
இனிமையான- அந்த இன்பக்குரல் இன்றி

உன் அன்பான் அரவணைப்புக்காய்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்- இவ்
அப்பாவியைத் தெரிகிறதா.....???????

சிந்தித்துப்பார் பெண்ணே- உன்னை
சினேகிக்க வைத்த தடத்தில்
நானே இறுகுண்டு போனதை
இப்போது சிரிக்கவும் தெரியாமல்
அழவும் முடியாமல்
திசைமாறிக்கொண்டிருக்கின்றேன்.

உன்னால்
மீண்டும் ஓர் இன்ப
இணைப்புக்குள் நான் இப்போ
தயவு செய்து தந்துவிடு
என் மனதை என்னிடமே..........