என் மனத்தோடு- நான்
சண்டையிட்டுக் கொள்கின்றேன்.
என்னை மரணிக்க விடு என்று- ஏனெனில்
என்னால் இப்போது
இயங்க முடியவில்லை- உன்
இனிமையான- அந்த இன்பக்குரல் இன்றி
உன் அன்பான் அரவணைப்புக்காய்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்- இவ்
அப்பாவியைத் தெரிகிறதா.....???????
சிந்தித்துப்பார் பெண்ணே- உன்னை
சினேகிக்க வைத்த தடத்தில்
நானே இறுகுண்டு போனதை
இப்போது சிரிக்கவும் தெரியாமல்
அழவும் முடியாமல்
திசைமாறிக்கொண்டிருக்கின்றேன்.
உன்னால்
மீண்டும் ஓர் இன்ப
இணைப்புக்குள் நான் இப்போ
தயவு செய்து தந்துவிடு
என் மனதை என்னிடமே..........
Friday, August 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment