Friday, August 21, 2009

அன்பானவளே.

என் மனத்தோடு- நான்
சண்டையிட்டுக் கொள்கின்றேன்.
என்னை மரணிக்க விடு என்று- ஏனெனில்
என்னால் இப்போது
இயங்க முடியவில்லை- உன்
இனிமையான- அந்த இன்பக்குரல் இன்றி

உன் அன்பான் அரவணைப்புக்காய்
அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்- இவ்
அப்பாவியைத் தெரிகிறதா.....???????

சிந்தித்துப்பார் பெண்ணே- உன்னை
சினேகிக்க வைத்த தடத்தில்
நானே இறுகுண்டு போனதை
இப்போது சிரிக்கவும் தெரியாமல்
அழவும் முடியாமல்
திசைமாறிக்கொண்டிருக்கின்றேன்.

உன்னால்
மீண்டும் ஓர் இன்ப
இணைப்புக்குள் நான் இப்போ
தயவு செய்து தந்துவிடு
என் மனதை என்னிடமே..........

No comments:

Post a Comment