Sunday, September 13, 2009

எதிர்பார்ப்பு.


கன்னி மரியே

காலம் எல்லாம் உனை எண்ணி- நான்

இங்கு தனியே.

உன் இதயச்சிலுவையில்

அறையப்பட்ட பின்பும்

யேசுபோல் மீண்டும் என்னால்

உயிர்க்க முடியவில்லை.

ஆப்பு இழுத்த குரங்கு போல்

அகப்பட்டு கொண்டேன் உணக்குள் நான்.

உன்னுள்ளே ஊறியவன் என்பதினால்

என்னும் உனைத் தூக்கியெறியாமல்

துடைத்து துடைத்து வைத்துள்ளேன்.

யார் யாரோ சொன்னார்கள்

உன்னில் செழும்பு பிடித்துள்ளதாய்.

இறுக்கித் துடைத்துவிட்டால்

இது எல்லாம் சரிவரும் என்றேன்.

இது விளக்கு அல்ல வாழ்க்கை என்றனர்.

எனக்கு ஏதும் விளங்கவில்லை

என்று விலத்திக் கொண்டேன்.

பார்த்தனர் யாவரும் எனை ஒரு பரிதாபமாக.

கேட்டனர் சிலர்

தம்பிக்கு என்னதான் குறை என்று???

பட்ட மரத்திற்கு சட்டை போட்டு பார்த்தேன்

ஒரு வெட்டை வெளியில் வைத்து.

பச்சை மரம் ஒன்று சொன்னது

நீ ஒரு பயித்தியக்காரன் என்று.

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல

எனது இதயம்

கைகளால் அல்ல

பெரும் கடப்பாறையினால்.

திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..

என் இதய நாளங்கள்.

அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.

அருகதை அற்ற சில மானிடத்தால்,,

பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்

வருத்தப்படுகிறது எனது மனது.

ஏன் எனில்

கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....

.திருத்த முற்படும் போதெல்லாம்

திணறிக் கொள்கின்றேன்

பொருத்தமற்ற போக்குகளினால்......

எழில் நீ.


எழிலினி

எழில் - நீ

சரி,கம,பத - நீ

தந்திடு

உனை -நீ

திரிபதாகம் புஷ்பம்

கதரிமுகம் -நீ

கல்யாணி சிவரஞ்சனி

கவனி

எனை -நீ.

வேதனை.


ஓ.........பெண்ணே ஒரு கணம் என்னை உற்று நோக்கு உருக்குலைந்து கொண்டிருக்கும் - என்னை உன் கண்களுக்கு தெரியவில்லையா??? நீ கண்களுக்குள் மாட்டியுள்ள கண்ணாடி விம்பத்தில் -நான் என்ன தண்ணி அடித்தவன் மாதிரியா தெரிகிறது???? எண்ணிப் பார் பெண்ணே உன் மேல் வைத்த கண்களினால் நானே காயமுற்றதை, காதலிக்க வைத்த தடத்தில் நானே இறுகிப் போனதை. ஏன் தான் இப்படி என் இதயத்தினுள் முட்கம்பிகளை திணிக்க முயல்கிறாய் நான் என்ன கட்டுக் கடங்காத காதல் காளையா??? விட்டுப் போ........ என்று சொன்னால் எங்கேயாவது எட்டிப் போய் இறந்து விட மாட்டேனா என்ன???