Wednesday, September 16, 2009

வாழ்க்கை.


வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.

இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.

பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.

வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.

நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???

வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??

பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.

காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.

ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.

அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.

எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????

பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.

வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

பொய்


புதிய சந்திப்புக்கள்,

புதுமையான மனப்பகிர்வு,

இளமை அனுபவங்கள்,

இன்பக் கைகலப்பு,

காலத்தின் இணைப்பு,

காதலின் சிறப்பு,

இதயத்தின் வருடல்,

இன்பத்தின் வருகை,

தேடலின் முடிவு,

விடியலின் தொடக்கம்,

செப்பனிட்ட நட்பு,

தெவிட்டாத பேச்சு,

நேரத்தின் அழைப்பு,

நின்மதியின் கலைப்பு,

இதுவெல்லாம் என்ன

எம்முடைய இணைப்பு.

சிந்திக்கச் செய்கின்ற,

சின்னம் சிறிய நிமிடம்,

கண்கள் கலந்து கொள்ளும் போதும்

மனங்கள் ஒருமிக்கும் போதும்

நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.

கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.

காமத்தால் இணைக்கப்பட்டது

வெறும் குளிர் காய்தல் ஆகிறது.

நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.

நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.

நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

மனம்.


மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........