Saturday, August 22, 2009

கண்ணீர்.


பெண்ணே
உன் கண்ணசைவிற்காக
காத்திருந்து காத்திருந்து
பார்வை இழந்தபின் தான்
எனக்குத் தெரிந்தது.
நான் ஒரு
பயித்தியக்காரன் என்பது.

உன் பெயரின் முதல் எழுத்தையே
என் முதுகெலும்பாய் எண்ணி வாழ்ந்து
கூன் விழுந்து போனேன்.
இப்போது தான்
எனக்குப் புரிந்தது
நான் ஒரு
முதுகெலும்பே இல்லாதவன் என்பது.

காதல் குழந்தையை சுமந்து சுமந்து
களைத்துப் போய்
கருத்தரித்தபோது
கண்ணீர்க் குழந்தை அல்லவா
எனக்குக் கிடைத்க்டிருக்கிறது.

எனது வருத்தம்

பரமபிதவிடம் போய் நான்
பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியர்களுக்கு அந்தக் கடவுள்
கண்களைக் கொடுத்ததர்க்காக.

உலகத்தின் சுவர்கள் எல்லாம்
உயர்ந்து உயர்ந்து
போன போதும் - எங்கள்
இதயத்தின் சுவர்களை
இன்னும் -நீங்கள்
இடித்துக்கொண்டிருக்கிறீர்களே
எதற்காக??

உனது கால்களுக்குக்
கோவில் கட்டுவேன் என்று
கத்திக்கொண்டிருந்தேன்
இப்போது - எனக்கு
வாயிருப்பதர்க்காகவே வருத்தப்படுகிறேன்.

ஒரு தலைக் காதல்.

கனவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒருதலைக் காதலன் நான்.

நீ அறிய மாட்டாய்
நான் இங்கு
நெருப்புக்குள் வாழ்வது.

பொசுங்கிக் கொண்டிருக்கின்றேன்.
நீ ஒளி தர வேண்டும்
என்பதர்க்காய்.

எனது குருதி நாளங்கள்
கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன.
ஏன் என்றால்
எமது
காதல் சுற்றோட்டத்தை
சுத்திகரிப்பதர்க்காய்.

எனக்குத் தெரியும் - நீ
எனக்குள் தான்
இருக்கின்றாய் என்று
ஆனால்
இதுவரையும் - நீ
அறிந்திருக்க மாட்டாய் - நான்
உணக்குள் இருப்பது
இது தான் ஒரு தலைக்காதல்.

தவிப்பு.

இழந்து விட்ட உணக்காக
இருந்து நான் அழுவதும்
ஏங்கித் தவிப்பதும்
இந்த நூற்றாண்டில்
இல்லாமல் போயாச்சு.

வண்டொன்று பூவருடி
தேன் சேர்த்த காதல் இது.
எங்கெங்கே சென்றாலும் - நீ
என்னோடு தானிருப்பாய்.
என்றெண்ணித் தானே
இது வரையும் - நான்
இருந்தேன்
ஆனால்
கன்றொன்றின் மேலேறிய - தேர்
போலாச்சு என் காதல்.

உனைப் பெண் பார்க்க
வரும் போது
பேசாமலா இருந்தாய்??? - சொல்
என்னை நீ
எண்ணாமல்
ஓம் என்று ஏன் சொன்னாய்......?????????

அந்நிய நாடு

அன்புள்ள நண்பனுக்கு.
அந்நிய நாட்டில் இருந்து- ஒரு
அனாதையின் குரல்,
இந்த மண்ணின் மனிதப் பறவைகளோடு
நானும்
இந்த மண்ணில் பறந்து கொண்டிருக்கின்றேன்.
உன்னோடு வந்து கலந்து விட என்
உள்ளம் துடித்தாலும்
என் காற்சிறகுகள் சற்றும்
களைப்பாறி விடுவதில்லை.
உன்னோடு வந்து என் உண்மை
கதை பேச
இருந்தாலும் ஒருசில
என் கண்ணீர்த்துளிகளை
உன் கைகளுக்கு தருகின்றேன்.
அழகான் வீடு - அதில்
அமர்ந்திருக்க யாரும் இல்லை.
ஆயிரம் வடிவங்களில் பஞ்சு மெத்தைகள்
அதில் படுத்துறங்க எங்களிற்கு நேரம் இல்லை.
அக்கமும் பக்கமும் அயலவர்கள்
அவர் யார் என்று இதுவரை பார்த்ததில்லை.
நித்தமும் நித்தமும் கண்விழித்து - நான்
நிரப்பிய வங்கிகள் கொஞ்சம் இல்லை.
உற்றமோ சுற்றமோ என்றுமில்லை- நாம்
உறவென்று சொல்லிட யாருமில்லை.
பட்டமும் பதவியும் பார்க்கவில்லை - இங்கு
பணம் சொன்ன சொல்லை யாரும்
மறுக்கவில்லை.
கெட்டவர் நல்லவர் யாரும் இல்லை - சட்டைப்
பைகளில் இல்லையேல்
வாழ்க்கையில்லை.
அப்பனைப் பிள்ளையும் பார்த்ததில்லை - அவன்
யார்?? என்று கேட்கவும் நேரம் இல்லை.
அன்னையை தந்தையை அணைத்ததில்லை - இங்கு
அன்பையும் பண்பையும் அறிந்ததில்லை.
வள்ளலும் வழங்கலும் எமக்குள் இல்லை - நல்ல
கொள்கையோ குறிக்கோளோ எவர்க்குமில்லை.
உண்ணவும் உடுக்கவும் முடிவதில்லை - அந்த
உயிர்ப்பசி எவர்க்குமே புரிவதில்லை.
அண்ணனும் தம்பியும் நெருக்கமில்லை - அவர்
அரைகுறை உடைகளில் குறைச்சலில்லை.
என்னும் சொல்லலாம் முடிச்சலில்லை - என்
சிறகுகள் துடிக்குது ஓச்சலில்லை.
இத்துடன் முடிக்கிறேன் எனி இரவு வேலை
இனியொரு முறை
இதைத்தொடர்ந்து சொல்வேன்.....
காத்திரு நண்பனே....