இழந்து விட்ட உணக்காக
இருந்து நான் அழுவதும்
ஏங்கித் தவிப்பதும்
இந்த நூற்றாண்டில்
இல்லாமல் போயாச்சு.
வண்டொன்று பூவருடி
தேன் சேர்த்த காதல் இது.
எங்கெங்கே சென்றாலும் - நீ
என்னோடு தானிருப்பாய்.
என்றெண்ணித் தானே
இது வரையும் - நான்
இருந்தேன்
ஆனால்
கன்றொன்றின் மேலேறிய - தேர்
போலாச்சு என் காதல்.
உனைப் பெண் பார்க்க
வரும் போது
பேசாமலா இருந்தாய்??? - சொல்
என்னை நீ
எண்ணாமல்
ஓம் என்று ஏன் சொன்னாய்......?????????
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment