Saturday, August 22, 2009

கண்ணீர்.


பெண்ணே
உன் கண்ணசைவிற்காக
காத்திருந்து காத்திருந்து
பார்வை இழந்தபின் தான்
எனக்குத் தெரிந்தது.
நான் ஒரு
பயித்தியக்காரன் என்பது.

உன் பெயரின் முதல் எழுத்தையே
என் முதுகெலும்பாய் எண்ணி வாழ்ந்து
கூன் விழுந்து போனேன்.
இப்போது தான்
எனக்குப் புரிந்தது
நான் ஒரு
முதுகெலும்பே இல்லாதவன் என்பது.

காதல் குழந்தையை சுமந்து சுமந்து
களைத்துப் போய்
கருத்தரித்தபோது
கண்ணீர்க் குழந்தை அல்லவா
எனக்குக் கிடைத்க்டிருக்கிறது.

No comments:

Post a Comment