Monday, September 14, 2009

எப்படி முடியும்.


காலத்தின் கட்டாயத்தினால்

கலக்கப் பட்டவர்கள் நாங்கள்.

நீ நினைத்திருக்க முடியாது,

இப்படி ஒருவன் இருப்பான் என்று.

ஏன் நான் கூட நினைத்ததில்லை.

இப்படி ஒரு நீ இருப்பாய் என்று.

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை இந்த இணைப்பை.

ஏனெனில் மனதுக்குள் மாட்டியுள்ள

அந்த மறைந்திருக்கும் உருவத்தை

என்னும் என்னால் மறக்க முடியவில்லை.

பின்பு ஏன் என்னுமொரு

கால இணைப்புக்குள் நான்????

செத்தவனுக்கு

மீண்டும் ஏன் வாழ்க்கைத் துடிப்பு??

உனது அழகான அந்த வருடலுக்கு

நான் வசப்பட்டுக்

கொண்டது உண்மை தான். - ஆனால்

பயமாகவிருக்கிறது.

மீண்டும் ஓர் பயணத்தை தொடர்வதற்கு.

ஏனெனில் எனக்குள்

என்னுமொரு உயிர் தவிப்பு.

உன் உள்ளத்தில் உள்ள

உண்மையான உறவு எனக்கு

உன்னதம் தருவதாய் இருந்தும்,,,

மனம் இம்சை படுகிறது.

ஏனெனில் அது ஒன்று தானே

எப்போதும் என்னோடு இருப்பது.

காலத்தின் இணைப்பில் நீ

இணைவாய் பின்

கட்டாயத்தின் பெயரில் நீ பிரிவாய்.

எப்படி என்னால்

என்னுமோர் கால இணைப்பில்.....??????

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,

உனது அன்பான அந்த வருடல்

என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

எனது மனத்திடையே நீ இப்போ.

எப்படி உன்னால் இது இயன்றது????

காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு

மீண்டும் ஒரு கலர் கனவு.

சிரித்துக் கொள்கிறேன்....

தெரியவில்லை ஏன் என்று???

சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்

ஆனால் கண்ணீர் வருவதில்லை.

நினைத்துக்கொள்கின்றேன்

நீ இல்லாத அந்த நிமிடத்தை.

உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.

உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.

காதலித்துக்கொள்

என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.

அப்படியானால்

எப்படி இது சாத்தியமானது????

காதலித்துக் கொள்ளவில்லை.....????

கைகள் பட்டதில்லை.......????

கண்கள் கலக்கவில்லை........????

ஆனால் இது கனவும் இல்லை.

எம்மிடையே என்ன உறவு இது?????

சிதறல்கள்.


வாழ்க்கைப் பயணத்தில்

வருகின்ற தடையங்களுக்காக - நான்

வருத்தப்படுபவன் அல்ல.

ஆனாலும் பாதைகளுக்காகப்

பயணத்தைத் தொடர்பவன் நான்.

பாதைகளும் பயணங்களும்

காலங்களுக்கு ஏற்ப்ப, மனிதர்களுக்கு ஏற்ப்ப

மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் மனிதர்கள் மாறுவது.......?????

சில வேளைகளில் நான்

சிறகடித்துக் கொள்கின்றேன்.

எனது சிறிய பருவத்தை.

பார்வதி அக்காவின் மாமரம்,

அதனருகில் மணற்கும்பி.

சுமதி அக்காவின் அன்பான வருடல்,

சுயநலமற்ற அரவணைப்பு .

மணற்கும்பியில் மாமா மகளும் நானும்

மண் வீடு கட்டி மகிழ்ந்தது அந்தக் காலம்.

சுமைகள் அற்ற மகிழ்வு.

அம்மாவின் தோழ் மீது நான்,

என்னருகில் தங்கை

அவளின் அன்பான முத்தம்,

தம்பியின் சண்டை,

இப்படி இப்படி எத்தனையோ இன்ப நிகழ்வுகள்.

அடிவளவு தென்னம் தோப்பு,

ஐயர் அம்மா மகள் அங்கலாய்ப்பு,

சித்தியின் சுட்டி மாடு,

மச்சாளின் கட்டியணைப்பு.....

இப்படி இப்படி எத்தனையோ

இன்பச்சிதறல்கள் எனக்குள்.

எல்லாம் எங்கே இப்போ........???????

நிஜங்கள்.


வெறும் கனவுகளுடன் வாழ்ந்து

களைத்து விட்டவன் நான். - எப்படி

நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......

என் சென்ற காலத்தை -இனம்

புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.

ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்

இருந்து விட முடியவில்லை இப்போது.

ஏதோ ஒன்று எனக்குள்

நின்று இம்சை தருகிறது.

உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.

இனம் தெரியாத மவுனம்,

காலம் தெரியாத நேரம்,

கணக்கிட முடியாத காலம்,

இவைகளுடன் எப்படி- நான்

இணைந்து கொண்டேன்???

எனக்குத் தான் எத்தனை

சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி

என்னால் மீண்டும்- நிஜங்களுடன்

நிற்க முடிகிறது???

சிந்தித்துப் பார்க்க -எனக்குச்

சிரிப்பாக வருகிறது.

ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே

அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.

என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............

நேற்றுவரை நான் நினைக்கவில்லை

என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.

நின்முகத்தைக் கண்டவுடன்

நினைவிழந்தேன் மறுகணமே.

காதல் இல்லை காமம் இல்லை - என்

கனவிலிலும் நீ இல்லை - ஆனால்

கண் இமைக்கும் பொழுதெல்லாம்

கண்மணியே எனக்குள் நீ.

சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி

நீ எனக்குள் என்று?

உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்

துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ

எறிந்து கொண்டிருக்கின்றேன்

ஏதேதோ எல்லாம் உணக்காக.

மீண்டும் எனக்குள் ஓர் வருடல்

அந்த மீறிய காலம் நோக்கி.

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்

அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ

புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இப்படிக்கு உணக்கு.