Monday, September 14, 2009

சிதறல்கள்.


வாழ்க்கைப் பயணத்தில்

வருகின்ற தடையங்களுக்காக - நான்

வருத்தப்படுபவன் அல்ல.

ஆனாலும் பாதைகளுக்காகப்

பயணத்தைத் தொடர்பவன் நான்.

பாதைகளும் பயணங்களும்

காலங்களுக்கு ஏற்ப்ப, மனிதர்களுக்கு ஏற்ப்ப

மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் மனிதர்கள் மாறுவது.......?????

சில வேளைகளில் நான்

சிறகடித்துக் கொள்கின்றேன்.

எனது சிறிய பருவத்தை.

பார்வதி அக்காவின் மாமரம்,

அதனருகில் மணற்கும்பி.

சுமதி அக்காவின் அன்பான வருடல்,

சுயநலமற்ற அரவணைப்பு .

மணற்கும்பியில் மாமா மகளும் நானும்

மண் வீடு கட்டி மகிழ்ந்தது அந்தக் காலம்.

சுமைகள் அற்ற மகிழ்வு.

அம்மாவின் தோழ் மீது நான்,

என்னருகில் தங்கை

அவளின் அன்பான முத்தம்,

தம்பியின் சண்டை,

இப்படி இப்படி எத்தனையோ இன்ப நிகழ்வுகள்.

அடிவளவு தென்னம் தோப்பு,

ஐயர் அம்மா மகள் அங்கலாய்ப்பு,

சித்தியின் சுட்டி மாடு,

மச்சாளின் கட்டியணைப்பு.....

இப்படி இப்படி எத்தனையோ

இன்பச்சிதறல்கள் எனக்குள்.

எல்லாம் எங்கே இப்போ........???????

1 comment: