Monday, September 14, 2009

நிஜங்கள்.


வெறும் கனவுகளுடன் வாழ்ந்து

களைத்து விட்டவன் நான். - எப்படி

நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......

என் சென்ற காலத்தை -இனம்

புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.

ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்

இருந்து விட முடியவில்லை இப்போது.

ஏதோ ஒன்று எனக்குள்

நின்று இம்சை தருகிறது.

உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.

இனம் தெரியாத மவுனம்,

காலம் தெரியாத நேரம்,

கணக்கிட முடியாத காலம்,

இவைகளுடன் எப்படி- நான்

இணைந்து கொண்டேன்???

எனக்குத் தான் எத்தனை

சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி

என்னால் மீண்டும்- நிஜங்களுடன்

நிற்க முடிகிறது???

சிந்தித்துப் பார்க்க -எனக்குச்

சிரிப்பாக வருகிறது.

ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே

அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

No comments:

Post a Comment