
காலத்தின் கட்டாயத்தினால்
கலக்கப் பட்டவர்கள் நாங்கள்.
நீ நினைத்திருக்க முடியாது,
இப்படி ஒருவன் இருப்பான் என்று.
ஏன் நான் கூட நினைத்ததில்லை.
இப்படி ஒரு நீ இருப்பாய் என்று.
என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை இந்த இணைப்பை.
ஏனெனில் மனதுக்குள் மாட்டியுள்ள
அந்த மறைந்திருக்கும் உருவத்தை
என்னும் என்னால் மறக்க முடியவில்லை.
பின்பு ஏன் என்னுமொரு
கால இணைப்புக்குள் நான்????
செத்தவனுக்கு
மீண்டும் ஏன் வாழ்க்கைத் துடிப்பு??
உனது அழகான அந்த வருடலுக்கு
நான் வசப்பட்டுக்
கொண்டது உண்மை தான். - ஆனால்
பயமாகவிருக்கிறது.
மீண்டும் ஓர் பயணத்தை தொடர்வதற்கு.
ஏனெனில் எனக்குள்
என்னுமொரு உயிர் தவிப்பு.
உன் உள்ளத்தில் உள்ள
உண்மையான உறவு எனக்கு
உன்னதம் தருவதாய் இருந்தும்,,,
மனம் இம்சை படுகிறது.
ஏனெனில் அது ஒன்று தானே
எப்போதும் என்னோடு இருப்பது.
காலத்தின் இணைப்பில் நீ
இணைவாய் பின்
கட்டாயத்தின் பெயரில் நீ பிரிவாய்.
எப்படி என்னால்
என்னுமோர் கால இணைப்பில்.....??????
No comments:
Post a Comment