
என்றும் என் அன்பானவளுக்கு,
உனது அன்பான அந்த வருடல்
என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
எனது மனத்திடையே நீ இப்போ.
எப்படி உன்னால் இது இயன்றது????
காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு
மீண்டும் ஒரு கலர் கனவு.
சிரித்துக் கொள்கிறேன்....
தெரியவில்லை ஏன் என்று???
சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்
ஆனால் கண்ணீர் வருவதில்லை.
நினைத்துக்கொள்கின்றேன்
நீ இல்லாத அந்த நிமிடத்தை.
உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.
உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.
காதலித்துக்கொள்
என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.
அப்படியானால்
எப்படி இது சாத்தியமானது????
காதலித்துக் கொள்ளவில்லை.....????
கைகள் பட்டதில்லை.......????
கண்கள் கலக்கவில்லை........????
ஆனால் இது கனவும் இல்லை.
எம்மிடையே என்ன உறவு இது?????
No comments:
Post a Comment