Monday, August 24, 2009

பானுமதி.


தேவதையே பானுமதி தெரிகிறதா????

என் இதயவலி

நீயும் என் காதல் நதி - அதில்

நீந்துகின்றேன் தன்னம் தனி- உன்

பேச்சு மொழி அழகினிலே - இப்போ

மூச்சைடைத்துப் போகின்றேன்.

உன்னழகு சிரிப்பு ஒலி - என்

உச்சிவரை இன்பவலி.

நேற்று வரை நினைத்திருந்தேன்

நின்மதியே இல்லையென்று - ஆனால்

பானுமதி உன்னாலே - நான்

முழுமதியாய் ஆகிவிட்டேன்.

அன்பான அரவணைப்பு - உன்

கரும் கூந்தல் தனியழகு

கருவிழிகள் கொவ்வையிதழ்,

கட்டுடல் உன் மேனி - அதை

தொட்டுவிட நினைக்கின்றேன் - உள்ளத்தை

உன்னை அல்ல.

உணக்குள்ளே செத்துவிடத் துடிக்கின்றேன்

உறவுடைய நாள் வரைக்கும் -உன்

உதட்டசைவு ஒலி கேட்டு - என்

உயிர் எங்கோ சென்று வரும்- உன்

மனத்தழகு நான் பார்த்து

மரணிக்கத்தான் சொல்லும்.

சங்குவரி கழுத்தழகு - அதில்

தாலி கட்டத் தான் சொல்லும்-உன்

நெஞ்சழகு நினை உற்று - என்

நின்மதியைத் தான் கொல்லும்.

இடுப்பழகு நான் பார்த்து -காதல்

போர் தொடுக்கத் தான் சொல்லும்- உன்

நடையழகு நான் கண்டு - பெரும்

படையெடுக்கத்தான் சொல்லும்.

முற்றுப்புள்ளி.


புள்ளி ஒன்று வைத்திருந்தேன்.

உணக்கும் எனக்கும் இடையே

நீ எனை நெருங்கும் போது

அது ஆச்சரியக்குறியானது!!!!!!!!!!!!!!

உனைத் தொட்டுப்பார்க்க

நினைத்ததினால் என் வாழ்க்கை

இப்போ கேள்விக்குறியானது???????

சற்று நான் தள்ளி இருந்திருப்பின்

நீ எனை மேற்கோள்குறி ஆக்கியிருப்பாய்"""""""""

கட்டுப்பாடு அற்றதனால்

இப்போ நீ இட்டாய் முற்றுப்புள்ளி.....

இதனால் தான் எமக்குள்ளே இடை-------வெளி.

கேள்வி.


என்னுயிர் இராட்சசிக்கு - உன்னால்

இதயத்தில் வலி பெற்றவன்

எழுதுகின்றேன்.

நேற்றிரவு நீ எனைக்

கூப்பிடுவதாக உணர்ந்தேன்.

திடுக்கிட்ட்டு கண்விழித்த போது- தான்

தெரிந்தது.

கனவு கூட கண்ணீர் வடித்தது.

ஓர் இரு ஆண்டா

உன்னை நான் காதலில் கண்டது??

உன் அறிமுகப்

பரீட்சையில் தேர்வடைந்த நான் -

எப்படி அடிமனத்திடையில்

எடுபடாமல் சென்றேன்????