
தேவதையே பானுமதி தெரிகிறதா????
என் இதயவலி
நீயும் என் காதல் நதி - அதில்
நீந்துகின்றேன் தன்னம் தனி- உன்
பேச்சு மொழி அழகினிலே - இப்போ
மூச்சைடைத்துப் போகின்றேன்.
உன்னழகு சிரிப்பு ஒலி - என்
உச்சிவரை இன்பவலி.
நேற்று வரை நினைத்திருந்தேன்
நின்மதியே இல்லையென்று - ஆனால்
பானுமதி உன்னாலே - நான்
முழுமதியாய் ஆகிவிட்டேன்.
அன்பான அரவணைப்பு - உன்
கரும் கூந்தல் தனியழகு
கருவிழிகள் கொவ்வையிதழ்,
கட்டுடல் உன் மேனி - அதை
தொட்டுவிட நினைக்கின்றேன் - உள்ளத்தை
உன்னை அல்ல.
உணக்குள்ளே செத்துவிடத் துடிக்கின்றேன்
உறவுடைய நாள் வரைக்கும் -உன்
உதட்டசைவு ஒலி கேட்டு - என்
உயிர் எங்கோ சென்று வரும்- உன்
மனத்தழகு நான் பார்த்து
மரணிக்கத்தான் சொல்லும்.
சங்குவரி கழுத்தழகு - அதில்
தாலி கட்டத் தான் சொல்லும்-உன்
நெஞ்சழகு நினை உற்று - என்
நின்மதியைத் தான் கொல்லும்.
இடுப்பழகு நான் பார்த்து -காதல்
போர் தொடுக்கத் தான் சொல்லும்- உன்
நடையழகு நான் கண்டு - பெரும்
படையெடுக்கத்தான் சொல்லும்.

.jpg)