Monday, August 24, 2009

பானுமதி.


தேவதையே பானுமதி தெரிகிறதா????

என் இதயவலி

நீயும் என் காதல் நதி - அதில்

நீந்துகின்றேன் தன்னம் தனி- உன்

பேச்சு மொழி அழகினிலே - இப்போ

மூச்சைடைத்துப் போகின்றேன்.

உன்னழகு சிரிப்பு ஒலி - என்

உச்சிவரை இன்பவலி.

நேற்று வரை நினைத்திருந்தேன்

நின்மதியே இல்லையென்று - ஆனால்

பானுமதி உன்னாலே - நான்

முழுமதியாய் ஆகிவிட்டேன்.

அன்பான அரவணைப்பு - உன்

கரும் கூந்தல் தனியழகு

கருவிழிகள் கொவ்வையிதழ்,

கட்டுடல் உன் மேனி - அதை

தொட்டுவிட நினைக்கின்றேன் - உள்ளத்தை

உன்னை அல்ல.

உணக்குள்ளே செத்துவிடத் துடிக்கின்றேன்

உறவுடைய நாள் வரைக்கும் -உன்

உதட்டசைவு ஒலி கேட்டு - என்

உயிர் எங்கோ சென்று வரும்- உன்

மனத்தழகு நான் பார்த்து

மரணிக்கத்தான் சொல்லும்.

சங்குவரி கழுத்தழகு - அதில்

தாலி கட்டத் தான் சொல்லும்-உன்

நெஞ்சழகு நினை உற்று - என்

நின்மதியைத் தான் கொல்லும்.

இடுப்பழகு நான் பார்த்து -காதல்

போர் தொடுக்கத் தான் சொல்லும்- உன்

நடையழகு நான் கண்டு - பெரும்

படையெடுக்கத்தான் சொல்லும்.

No comments:

Post a Comment