
அப்புவுக்கு
இங்கிருந்து சுப்பு எழுதுவது.
எப்படியணை இருக்கிறியள்??
இப்பவும் திண்ணை தானா???
அந்த மண்ண
நா விட்டு வந்து- இங்கு
கொண்ணையுடன்
சேர்ந்து இருக்கன்.
உண்ணாணச்
சொல்லிவிட்டன் - இது
உதவாத ஊரப்பு .
அப்பனைப்
பிள்ளையும் பாரான்.
ஆத்தாளை
மேய்ப்பார் நாய்போல்
காத்தால வெளிக்கிட்டால்
கள்ளர் போல்
இரவுதான் வாறார்.
பார்த்தாலோ கேட்டாலோ
பைத்தியமா என்பார்.. ?
கூப்பிட்டதற்காக
உங்களைப் பார்க்குறம்.
கூப்பாடு போட்டால்
கொண்டே போடுவம்
எண்டல்லோ வெருட்டினம்.
No comments:
Post a Comment