Tuesday, August 25, 2009

அப்பு.


அப்புவுக்கு

இங்கிருந்து சுப்பு எழுதுவது.

எப்படியணை இருக்கிறியள்??

இப்பவும் திண்ணை தானா???

அந்த மண்ண

நா விட்டு வந்து- இங்கு

கொண்ணையுடன்

சேர்ந்து இருக்கன்.

உண்ணாணச்

சொல்லிவிட்டன் - இது

உதவாத ஊரப்பு .

அப்பனைப்

பிள்ளையும் பாரான்.

ஆத்தாளை

மேய்ப்பார் நாய்போல்

காத்தால வெளிக்கிட்டால்

கள்ளர் போல்

இரவுதான் வாறார்.

பார்த்தாலோ கேட்டாலோ

பைத்தியமா என்பார்.. ?

கூப்பிட்டதற்காக

உங்களைப் பார்க்குறம்.

கூப்பாடு போட்டால்

கொண்டே போடுவம்

எண்டல்லோ வெருட்டினம்.

No comments:

Post a Comment