Tuesday, August 25, 2009

மறக்க முடியுமா??


கிட்டி அடித்ததும்

கிளித்தட்டு மறித்ததும்

பட்டியில் சுட்டியனைக்

கட்டிப் பால் கறந்து குடித்ததும்

வளவுப் புட்டியில்

பனம் கிழங்கு புடுங்காமல்

விட்டதனால்

குஞ்சியப்பு எனைக்

கொடுக்கோடு கலைத்ததும்

அம்மாவைக் கட்டிபு பிடித்து

விளையாடும் போது

காளையது எட்டியுதைத்ததும்

குட்டி போட்ட நாய்க்கு

கல்லெறிந்து - அது

கோபங்கொண்டு எனைக்

குரைத்துக் கடித்ததும்

கோவில் திருவிழாவில்

புக்கை வேண்டுவதர்க்காய்

சக்கரையக்கா மகளோடு

சண்டை பிடித்ததும்

நித்திரை கொள்ளாமல்

சின்னத்திரையில் படம் பார்த்துத்

திரிந்ததும் இத்திரையில்

இப்போதும் எனக்குள்

ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment