Saturday, September 12, 2009

துடிப்பு.


உன்னிடத்தில் உள்ளதை

எனக்குத் தர மறுக்கிறாய் - நான்

கண்ணிமைக்கும் பொழுதில்

காதல் வதைப் படுத்துகிறாய்.

கண் என்பேன்.

மணி என்பேன்.

காதலித்தால்

என்னுயிர் என்பேன்.

பெண் என்பேன்.

மலர் என்பேன்.

பேதை நீ

என் கோவில் என்பேன்.

விண் என்பேன்.

முகில் என்பேன்.

வேதனைக்கு

நீ என் சுகம் என்பேன்.

வண்ண மலர் எடுத்து

வடிவாக

உனைத் தொடுத்து

என்னுயிரில் அதையிட்டு

இணைய மனம் துடிக்கிறது.

No comments:

Post a Comment