
காதல் அரக்கியே
உன்மேல் காதல் கொண்டேன்.
அமிலம் பாதி அமுதம் பாதி
எல்லாம் உன்னில் கண்டேன்.
நீ எம் இதயங்களுக்கு
அடிக்கப்பட்ட ஆனி- நம்
வாழ்க்கை இடைக்கால
தன்னாட்சி அதிகாரம்
உன்னோடு என்பதனால் - எம்
இதயங்களுக்கே
உயிர் அடங்குச் சட்டமா???
அரக்கிகளுக்கெல்லாம் அரசி - நீ
உனைத் தரிசிக்க
வந்தவர்க்கு கொடுத்தாய்
வாய்க்கு அரிசி நீ
மரணத்தின் விழிம்பில் நின்று- உன்னிடம்
மண்டியிட்டு கேட்கிறேன் -எனை
மரணிக்க விடு என்று.
காதல் அரக்கியே
கணக்கிட்டு கொள்
இப்போது உன்னால் காயப்பட்டு
கல்லறை ஆக்கப்பட்ட
காதல் நெஞ்சங்கள் எத்தனை என்று
ஒன்றை மட்டும் உற்று நோக்கு
சாவதற்காக முளைத்த புதர்கள் அல்ல நாம்
வாழ்வதற்காக அமைந்த
காதல் சமுத்திரங்கள் -இதில்
நீயும் நினைத்தால்
நீந்தப் பழகிக்கொள்
நின்று ரசிக்க நினைத்தால்
சற்றே ஒதுங்கிக் கொள்.
No comments:
Post a Comment