Saturday, September 12, 2009

காதல் அரக்கி.


காதல் அரக்கியே

உன்மேல் காதல் கொண்டேன்.

அமிலம் பாதி அமுதம் பாதி

எல்லாம் உன்னில் கண்டேன்.

நீ எம் இதயங்களுக்கு

அடிக்கப்பட்ட ஆனி- நம்

வாழ்க்கை இடைக்கால

தன்னாட்சி அதிகாரம்

உன்னோடு என்பதனால் - எம்

இதயங்களுக்கே

உயிர் அடங்குச் சட்டமா???

அரக்கிகளுக்கெல்லாம் அரசி - நீ

உனைத் தரிசிக்க

வந்தவர்க்கு கொடுத்தாய்

வாய்க்கு அரிசி நீ

மரணத்தின் விழிம்பில் நின்று- உன்னிடம்

மண்டியிட்டு கேட்கிறேன் -எனை

மரணிக்க விடு என்று.

காதல் அரக்கியே

கணக்கிட்டு கொள்

இப்போது உன்னால் காயப்பட்டு

கல்லறை ஆக்கப்பட்ட

காதல் நெஞ்சங்கள் எத்தனை என்று

ஒன்றை மட்டும் உற்று நோக்கு

சாவதற்காக முளைத்த புதர்கள் அல்ல நாம்

வாழ்வதற்காக அமைந்த

காதல் சமுத்திரங்கள் -இதில்

நீயும் நினைத்தால்

நீந்தப் பழகிக்கொள்

நின்று ரசிக்க நினைத்தால்

சற்றே ஒதுங்கிக் கொள்.

No comments:

Post a Comment