
எனதுயிர் நண்பா,
எப்படியடா இருக்கின்றாய்??
கந்தப்பு சொன்னார்-நீ
காசைக்கட்டி கனடாவிற்கு
வெளிக்கிட்டு,
ஏமாந்து விட்டாய் என்று- நான்
சொன்னேன்.
அவன் ஏமாறவில்லை.
இங்கு வந்து
நாம்தான் ஏமாந்து
விட்டோம் என்று.
ஆசையில் வெளிக்கிட்டோம் - அந்த
அழகான ஊரை விட்டு.
தோசை சுடுவதர்க்கு - கல்
சூடாவிருக்க வேணும்
என்று அடிக்கடி
அப்பு சொல்வார்- ஆனால்
இங்கு அதே போல்
இல்லாமல்
கல் சூடோ இல்லையோ
தோசை சுடப்புட்டு விடுகிறது.
கல்லை விடத் தோசை
கனமாவிருக்கும்,
சுடுபவர்களின்
மனசைப் போல்- ஏன்
எனில் சுட்டு சுட்டே
அவர்களும் கற்கள்
ஆகிவிட்டனர்.
அனேகம் விறகிற்காய்
நாங்களும் எரிக்கப் படுகிறோம்.
ஆனாலும் தோசை விற்பனைக்கு.
No comments:
Post a Comment