Saturday, September 12, 2009

ஏமாற்றம்.


எனதுயிர் நண்பா,

எப்படியடா இருக்கின்றாய்??

கந்தப்பு சொன்னார்-நீ

காசைக்கட்டி கனடாவிற்கு

வெளிக்கிட்டு,

ஏமாந்து விட்டாய் என்று- நான்

சொன்னேன்.

அவன் ஏமாறவில்லை.

இங்கு வந்து

நாம்தான் ஏமாந்து

விட்டோம் என்று.

ஆசையில் வெளிக்கிட்டோம் - அந்த

அழகான ஊரை விட்டு.

தோசை சுடுவதர்க்கு - கல்

சூடாவிருக்க வேணும்

என்று அடிக்கடி

அப்பு சொல்வார்- ஆனால்

இங்கு அதே போல்

இல்லாமல்

கல் சூடோ இல்லையோ

தோசை சுடப்புட்டு விடுகிறது.

கல்லை விடத் தோசை

கனமாவிருக்கும்,

சுடுபவர்களின்

மனசைப் போல்- ஏன்

எனில் சுட்டு சுட்டே

அவர்களும் கற்கள்

ஆகிவிட்டனர்.

அனேகம் விறகிற்காய்

நாங்களும் எரிக்கப் படுகிறோம்.

ஆனாலும் தோசை விற்பனைக்கு.

No comments:

Post a Comment