
இங்கும் நான்
இப்போதும் தேடுகின்றேன் - என்
தூர தேசத்து உறவுகளை - இங்கே
பாசங்களுக்கு
வட்டி கட்டிக் கொண்டால்- தான்
நேசங்களுக்குள்
நெருக்க்கம் தெரியும் - இங்கே
ஓடங்கள்
நிறையவே இருந்தும் - அதன்
துடுப்புக்கள் விறகாக
அடுப்பெரிக்கப்படுகின்றன.
ஏன் எனில்
எங்கள் கரையை இனி
எவரும் எட்டக் கூடாது
என்பதர்க்காய்- இங்கு
பட்ட மரங்களுக்கு
பச்சை குத்திக் கொண்டவர்
தான் அதிகம்.
அட்சய பாத்திரத்தில்
அவலங்கள் தான்
அள்ளப்படுகின்றன.
கன்னியர்கள் இங்கே
பகுத்துண்ணப்படுகின்றனர்.
கட்டுப் பாடற்ற
கலாச்சாரத்தில் - எம்
தேசப்பற்று
செத்துப்போய்க்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment