Saturday, September 12, 2009

கனேடிய தேசம்.


இங்கும் நான்

இப்போதும் தேடுகின்றேன் - என்

தூர தேசத்து உறவுகளை - இங்கே

பாசங்களுக்கு

வட்டி கட்டிக் கொண்டால்- தான்

நேசங்களுக்குள்

நெருக்க்கம் தெரியும் - இங்கே

ஓடங்கள்

நிறையவே இருந்தும் - அதன்

துடுப்புக்கள் விறகாக

அடுப்பெரிக்கப்படுகின்றன.

ஏன் எனில்

எங்கள் கரையை இனி

எவரும் எட்டக் கூடாது

என்பதர்க்காய்- இங்கு

பட்ட மரங்களுக்கு

பச்சை குத்திக் கொண்டவர்

தான் அதிகம்.

அட்சய பாத்திரத்தில்

அவலங்கள் தான்

அள்ளப்படுகின்றன.

கன்னியர்கள் இங்கே

பகுத்துண்ணப்படுகின்றனர்.

கட்டுப் பாடற்ற

கலாச்சாரத்தில் - எம்

தேசப்பற்று

செத்துப்போய்க்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment