Monday, September 21, 2009

அறிமுகத்துடன்.


என்றும் என் பிரியசகிக்கு.........!


தேவதையே பிரியசகி..

தேன் மழை தான் உன் கவிதை வரி.

நானும் ஓர் கவிஞ்ஞன் என்று

நாளும் நான் நினைத்திருந்தேன்.

உன்.............

முதல் கவிதை பார்த்தேன். மூச்சடைத்தே போனேன்.

மறுகவிதை பார்த்தேன் மரணித்தே போனேன் - இப்போ

எனக்குள்ளே சிறகடிக்கும் நினைவுகளை

உணக்குள்ளே செரிகிடத்துடிக்கின்றேன் - உன்

செல் அடிக்கும் போதெல்லாம் நான்

புல்லரிதே போனேன்.......!

உன் கவிதைக்கு அழகிருக்கு. அதைக் காதலிக்கும் மனம் எனக்கிருக்கு.

அறிவிருக்கு, நல் அழகிருக்கு, அரவணைக்கும் நல் பண்பிருக்கு,

கருவிருக்கு, கற்பனையிருக்கு, கதையிருக்கு, இசையிருக்கு - உணக்கது

எல்லாமே இணைந்திருக்கு.

ஆனால்...........?????????

என்னோடு இருந்ததெல்லாம் நானும் என் மனதும் தான்.

காகிதப் பூக்கள், கசங்கிய நாட்கள், காதல் கொண்ட நெஞ்சம்,

கறை பட்ட உள்ளம்...........

சோகம் கொண்ட மனது. தூங்கிடாத இரவு.

தாடி வைத்த முகம் தலையணையே வாழ்க்கை.

இப்படியே ஓடி விட்ட என்னுடைய நாட்கள்...............!!!!

கடவுள்.


கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.

ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.

நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது

என்பது உண்மை என்றதை அறிவாய்.

மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.

கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.

ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.

உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.

ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????

இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???

ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.

ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.

கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு

ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.