Monday, September 14, 2009

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.

என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............

நேற்றுவரை நான் நினைக்கவில்லை

என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.

நின்முகத்தைக் கண்டவுடன்

நினைவிழந்தேன் மறுகணமே.

காதல் இல்லை காமம் இல்லை - என்

கனவிலிலும் நீ இல்லை - ஆனால்

கண் இமைக்கும் பொழுதெல்லாம்

கண்மணியே எனக்குள் நீ.

சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி

நீ எனக்குள் என்று?

உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்

துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ

எறிந்து கொண்டிருக்கின்றேன்

ஏதேதோ எல்லாம் உணக்காக.

மீண்டும் எனக்குள் ஓர் வருடல்

அந்த மீறிய காலம் நோக்கி.

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்

அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ

புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இப்படிக்கு உணக்கு.

No comments:

Post a Comment