பரமபிதவிடம் போய் நான்
பாவமன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியர்களுக்கு அந்தக் கடவுள்
கண்களைக் கொடுத்ததர்க்காக.
உலகத்தின் சுவர்கள் எல்லாம்
உயர்ந்து உயர்ந்து
போன போதும் - எங்கள்
இதயத்தின் சுவர்களை
இன்னும் -நீங்கள்
இடித்துக்கொண்டிருக்கிறீர்களே
எதற்காக??
உனது கால்களுக்குக்
கோவில் கட்டுவேன் என்று
கத்திக்கொண்டிருந்தேன்
இப்போது - எனக்கு
வாயிருப்பதர்க்காகவே வருத்தப்படுகிறேன்.
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment