Monday, September 21, 2009

அறிமுகத்துடன்.


என்றும் என் பிரியசகிக்கு.........!


தேவதையே பிரியசகி..

தேன் மழை தான் உன் கவிதை வரி.

நானும் ஓர் கவிஞ்ஞன் என்று

நாளும் நான் நினைத்திருந்தேன்.

உன்.............

முதல் கவிதை பார்த்தேன். மூச்சடைத்தே போனேன்.

மறுகவிதை பார்த்தேன் மரணித்தே போனேன் - இப்போ

எனக்குள்ளே சிறகடிக்கும் நினைவுகளை

உணக்குள்ளே செரிகிடத்துடிக்கின்றேன் - உன்

செல் அடிக்கும் போதெல்லாம் நான்

புல்லரிதே போனேன்.......!

உன் கவிதைக்கு அழகிருக்கு. அதைக் காதலிக்கும் மனம் எனக்கிருக்கு.

அறிவிருக்கு, நல் அழகிருக்கு, அரவணைக்கும் நல் பண்பிருக்கு,

கருவிருக்கு, கற்பனையிருக்கு, கதையிருக்கு, இசையிருக்கு - உணக்கது

எல்லாமே இணைந்திருக்கு.

ஆனால்...........?????????

என்னோடு இருந்ததெல்லாம் நானும் என் மனதும் தான்.

காகிதப் பூக்கள், கசங்கிய நாட்கள், காதல் கொண்ட நெஞ்சம்,

கறை பட்ட உள்ளம்...........

சோகம் கொண்ட மனது. தூங்கிடாத இரவு.

தாடி வைத்த முகம் தலையணையே வாழ்க்கை.

இப்படியே ஓடி விட்ட என்னுடைய நாட்கள்...............!!!!

கடவுள்.


கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.

ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.

நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது

என்பது உண்மை என்றதை அறிவாய்.

மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.

கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.

ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.

உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.

ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????

இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???

ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.

ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.

கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு

ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.

Wednesday, September 16, 2009

வாழ்க்கை.


வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.

இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.

பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.

வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.

நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???

வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??

பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.

காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.

ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.

அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.

எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????

பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.

வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

பொய்


புதிய சந்திப்புக்கள்,

புதுமையான மனப்பகிர்வு,

இளமை அனுபவங்கள்,

இன்பக் கைகலப்பு,

காலத்தின் இணைப்பு,

காதலின் சிறப்பு,

இதயத்தின் வருடல்,

இன்பத்தின் வருகை,

தேடலின் முடிவு,

விடியலின் தொடக்கம்,

செப்பனிட்ட நட்பு,

தெவிட்டாத பேச்சு,

நேரத்தின் அழைப்பு,

நின்மதியின் கலைப்பு,

இதுவெல்லாம் என்ன

எம்முடைய இணைப்பு.

சிந்திக்கச் செய்கின்ற,

சின்னம் சிறிய நிமிடம்,

கண்கள் கலந்து கொள்ளும் போதும்

மனங்கள் ஒருமிக்கும் போதும்

நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.

கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.

காமத்தால் இணைக்கப்பட்டது

வெறும் குளிர் காய்தல் ஆகிறது.

நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.

நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.

நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

மனம்.


மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........

Monday, September 14, 2009

எப்படி முடியும்.


காலத்தின் கட்டாயத்தினால்

கலக்கப் பட்டவர்கள் நாங்கள்.

நீ நினைத்திருக்க முடியாது,

இப்படி ஒருவன் இருப்பான் என்று.

ஏன் நான் கூட நினைத்ததில்லை.

இப்படி ஒரு நீ இருப்பாய் என்று.

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை இந்த இணைப்பை.

ஏனெனில் மனதுக்குள் மாட்டியுள்ள

அந்த மறைந்திருக்கும் உருவத்தை

என்னும் என்னால் மறக்க முடியவில்லை.

பின்பு ஏன் என்னுமொரு

கால இணைப்புக்குள் நான்????

செத்தவனுக்கு

மீண்டும் ஏன் வாழ்க்கைத் துடிப்பு??

உனது அழகான அந்த வருடலுக்கு

நான் வசப்பட்டுக்

கொண்டது உண்மை தான். - ஆனால்

பயமாகவிருக்கிறது.

மீண்டும் ஓர் பயணத்தை தொடர்வதற்கு.

ஏனெனில் எனக்குள்

என்னுமொரு உயிர் தவிப்பு.

உன் உள்ளத்தில் உள்ள

உண்மையான உறவு எனக்கு

உன்னதம் தருவதாய் இருந்தும்,,,

மனம் இம்சை படுகிறது.

ஏனெனில் அது ஒன்று தானே

எப்போதும் என்னோடு இருப்பது.

காலத்தின் இணைப்பில் நீ

இணைவாய் பின்

கட்டாயத்தின் பெயரில் நீ பிரிவாய்.

எப்படி என்னால்

என்னுமோர் கால இணைப்பில்.....??????

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,

உனது அன்பான அந்த வருடல்

என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

எனது மனத்திடையே நீ இப்போ.

எப்படி உன்னால் இது இயன்றது????

காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு

மீண்டும் ஒரு கலர் கனவு.

சிரித்துக் கொள்கிறேன்....

தெரியவில்லை ஏன் என்று???

சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்

ஆனால் கண்ணீர் வருவதில்லை.

நினைத்துக்கொள்கின்றேன்

நீ இல்லாத அந்த நிமிடத்தை.

உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.

உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.

காதலித்துக்கொள்

என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.

அப்படியானால்

எப்படி இது சாத்தியமானது????

காதலித்துக் கொள்ளவில்லை.....????

கைகள் பட்டதில்லை.......????

கண்கள் கலக்கவில்லை........????

ஆனால் இது கனவும் இல்லை.

எம்மிடையே என்ன உறவு இது?????

சிதறல்கள்.


வாழ்க்கைப் பயணத்தில்

வருகின்ற தடையங்களுக்காக - நான்

வருத்தப்படுபவன் அல்ல.

ஆனாலும் பாதைகளுக்காகப்

பயணத்தைத் தொடர்பவன் நான்.

பாதைகளும் பயணங்களும்

காலங்களுக்கு ஏற்ப்ப, மனிதர்களுக்கு ஏற்ப்ப

மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் மனிதர்கள் மாறுவது.......?????

சில வேளைகளில் நான்

சிறகடித்துக் கொள்கின்றேன்.

எனது சிறிய பருவத்தை.

பார்வதி அக்காவின் மாமரம்,

அதனருகில் மணற்கும்பி.

சுமதி அக்காவின் அன்பான வருடல்,

சுயநலமற்ற அரவணைப்பு .

மணற்கும்பியில் மாமா மகளும் நானும்

மண் வீடு கட்டி மகிழ்ந்தது அந்தக் காலம்.

சுமைகள் அற்ற மகிழ்வு.

அம்மாவின் தோழ் மீது நான்,

என்னருகில் தங்கை

அவளின் அன்பான முத்தம்,

தம்பியின் சண்டை,

இப்படி இப்படி எத்தனையோ இன்ப நிகழ்வுகள்.

அடிவளவு தென்னம் தோப்பு,

ஐயர் அம்மா மகள் அங்கலாய்ப்பு,

சித்தியின் சுட்டி மாடு,

மச்சாளின் கட்டியணைப்பு.....

இப்படி இப்படி எத்தனையோ

இன்பச்சிதறல்கள் எனக்குள்.

எல்லாம் எங்கே இப்போ........???????

நிஜங்கள்.


வெறும் கனவுகளுடன் வாழ்ந்து

களைத்து விட்டவன் நான். - எப்படி

நிஜங்களுடன் மீண்டும் நெருங்க முடிகிறது?? சிந்தித்துப்பார்க்கின்றேன்.......

என் சென்ற காலத்தை -இனம்

புரியாத ஓர் ஏமாற்றம் எனக்குள்.

ஏன், எதற்கு , எப்படி என்று- என்னால்

இருந்து விட முடியவில்லை இப்போது.

ஏதோ ஒன்று எனக்குள்

நின்று இம்சை தருகிறது.

உற்று நோக்கினால் ஒன்றும் புரியவில்லை.

இனம் தெரியாத மவுனம்,

காலம் தெரியாத நேரம்,

கணக்கிட முடியாத காலம்,

இவைகளுடன் எப்படி- நான்

இணைந்து கொண்டேன்???

எனக்குத் தான் எத்தனை

சுமைகள், துன்பங்கள் இதற்குள்- எப்படி

என்னால் மீண்டும்- நிஜங்களுடன்

நிற்க முடிகிறது???

சிந்தித்துப் பார்க்க -எனக்குச்

சிரிப்பாக வருகிறது.

ஏனெனில் முன்பு சிரிப்பதற்காகவே

அழுதவன் நான்.

மீண்டும் நிஜங்களுடன் நான்......

என் சிந்தனையில் இருந்து சில சிதறல்கள்.


அவளுக்காக.

என் சிந்தனைக்குள் உறையுண்டவளுக்கு............

நேற்றுவரை நான் நினைக்கவில்லை

என்னும் ஒரு நிசப்தம் எனக்குள் என்று.

நின்முகத்தைக் கண்டவுடன்

நினைவிழந்தேன் மறுகணமே.

காதல் இல்லை காமம் இல்லை - என்

கனவிலிலும் நீ இல்லை - ஆனால்

கண் இமைக்கும் பொழுதெல்லாம்

கண்மணியே எனக்குள் நீ.

சிந்தித்துப் பார்க்கின்றேன் சின்னவளே- எப்படி

நீ எனக்குள் என்று?

உன்னைத் தூக்கி எறிவதர்க்காய்

துடித்துக்கொண்டிருந்தவன் நான் - இப்போ

எறிந்து கொண்டிருக்கின்றேன்

ஏதேதோ எல்லாம் உணக்காக.

மீண்டும் எனக்குள் ஓர் வருடல்

அந்த மீறிய காலம் நோக்கி.

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன் - ஆனால்

அதைச்சற்று தள்ளி வைப்பதர்க்காக - இப்போ

புதுச்சரத்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

இப்படிக்கு உணக்கு.

Sunday, September 13, 2009

எதிர்பார்ப்பு.


கன்னி மரியே

காலம் எல்லாம் உனை எண்ணி- நான்

இங்கு தனியே.

உன் இதயச்சிலுவையில்

அறையப்பட்ட பின்பும்

யேசுபோல் மீண்டும் என்னால்

உயிர்க்க முடியவில்லை.

ஆப்பு இழுத்த குரங்கு போல்

அகப்பட்டு கொண்டேன் உணக்குள் நான்.

உன்னுள்ளே ஊறியவன் என்பதினால்

என்னும் உனைத் தூக்கியெறியாமல்

துடைத்து துடைத்து வைத்துள்ளேன்.

யார் யாரோ சொன்னார்கள்

உன்னில் செழும்பு பிடித்துள்ளதாய்.

இறுக்கித் துடைத்துவிட்டால்

இது எல்லாம் சரிவரும் என்றேன்.

இது விளக்கு அல்ல வாழ்க்கை என்றனர்.

எனக்கு ஏதும் விளங்கவில்லை

என்று விலத்திக் கொண்டேன்.

பார்த்தனர் யாவரும் எனை ஒரு பரிதாபமாக.

கேட்டனர் சிலர்

தம்பிக்கு என்னதான் குறை என்று???

பட்ட மரத்திற்கு சட்டை போட்டு பார்த்தேன்

ஒரு வெட்டை வெளியில் வைத்து.

பச்சை மரம் ஒன்று சொன்னது

நீ ஒரு பயித்தியக்காரன் என்று.

வேறுபாடு.


தட்டப்படுகிறது கதவுகள் அல்ல

எனது இதயம்

கைகளால் அல்ல

பெரும் கடப்பாறையினால்.

திறக்கப்பட்டது கதவுகள் அல்ல..

என் இதய நாளங்கள்.

அடிக்கடி நான் இப்படி ஆகிரமிக்கப் படுகிறேன்.

அருகதை அற்ற சில மானிடத்தால்,,

பொறுத்துக் கொள்ள நினைக்கின்ற போதெல்லாம்

வருத்தப்படுகிறது எனது மனது.

ஏன் எனில்

கருத்து வேறுபாடுகளோடு சேர்ந்த கைகலப்பினால்.....

.திருத்த முற்படும் போதெல்லாம்

திணறிக் கொள்கின்றேன்

பொருத்தமற்ற போக்குகளினால்......

எழில் நீ.


எழிலினி

எழில் - நீ

சரி,கம,பத - நீ

தந்திடு

உனை -நீ

திரிபதாகம் புஷ்பம்

கதரிமுகம் -நீ

கல்யாணி சிவரஞ்சனி

கவனி

எனை -நீ.

வேதனை.


ஓ.........பெண்ணே ஒரு கணம் என்னை உற்று நோக்கு உருக்குலைந்து கொண்டிருக்கும் - என்னை உன் கண்களுக்கு தெரியவில்லையா??? நீ கண்களுக்குள் மாட்டியுள்ள கண்ணாடி விம்பத்தில் -நான் என்ன தண்ணி அடித்தவன் மாதிரியா தெரிகிறது???? எண்ணிப் பார் பெண்ணே உன் மேல் வைத்த கண்களினால் நானே காயமுற்றதை, காதலிக்க வைத்த தடத்தில் நானே இறுகிப் போனதை. ஏன் தான் இப்படி என் இதயத்தினுள் முட்கம்பிகளை திணிக்க முயல்கிறாய் நான் என்ன கட்டுக் கடங்காத காதல் காளையா??? விட்டுப் போ........ என்று சொன்னால் எங்கேயாவது எட்டிப் போய் இறந்து விட மாட்டேனா என்ன???

Saturday, September 12, 2009

காதல் அரக்கி.


காதல் அரக்கியே

உன்மேல் காதல் கொண்டேன்.

அமிலம் பாதி அமுதம் பாதி

எல்லாம் உன்னில் கண்டேன்.

நீ எம் இதயங்களுக்கு

அடிக்கப்பட்ட ஆனி- நம்

வாழ்க்கை இடைக்கால

தன்னாட்சி அதிகாரம்

உன்னோடு என்பதனால் - எம்

இதயங்களுக்கே

உயிர் அடங்குச் சட்டமா???

அரக்கிகளுக்கெல்லாம் அரசி - நீ

உனைத் தரிசிக்க

வந்தவர்க்கு கொடுத்தாய்

வாய்க்கு அரிசி நீ

மரணத்தின் விழிம்பில் நின்று- உன்னிடம்

மண்டியிட்டு கேட்கிறேன் -எனை

மரணிக்க விடு என்று.

காதல் அரக்கியே

கணக்கிட்டு கொள்

இப்போது உன்னால் காயப்பட்டு

கல்லறை ஆக்கப்பட்ட

காதல் நெஞ்சங்கள் எத்தனை என்று

ஒன்றை மட்டும் உற்று நோக்கு

சாவதற்காக முளைத்த புதர்கள் அல்ல நாம்

வாழ்வதற்காக அமைந்த

காதல் சமுத்திரங்கள் -இதில்

நீயும் நினைத்தால்

நீந்தப் பழகிக்கொள்

நின்று ரசிக்க நினைத்தால்

சற்றே ஒதுங்கிக் கொள்.

கனேடிய தேசம்.


இங்கும் நான்

இப்போதும் தேடுகின்றேன் - என்

தூர தேசத்து உறவுகளை - இங்கே

பாசங்களுக்கு

வட்டி கட்டிக் கொண்டால்- தான்

நேசங்களுக்குள்

நெருக்க்கம் தெரியும் - இங்கே

ஓடங்கள்

நிறையவே இருந்தும் - அதன்

துடுப்புக்கள் விறகாக

அடுப்பெரிக்கப்படுகின்றன.

ஏன் எனில்

எங்கள் கரையை இனி

எவரும் எட்டக் கூடாது

என்பதர்க்காய்- இங்கு

பட்ட மரங்களுக்கு

பச்சை குத்திக் கொண்டவர்

தான் அதிகம்.

அட்சய பாத்திரத்தில்

அவலங்கள் தான்

அள்ளப்படுகின்றன.

கன்னியர்கள் இங்கே

பகுத்துண்ணப்படுகின்றனர்.

கட்டுப் பாடற்ற

கலாச்சாரத்தில் - எம்

தேசப்பற்று

செத்துப்போய்க்கொண்டிருக்கிறது.

ஏமாற்றம்.


எனதுயிர் நண்பா,

எப்படியடா இருக்கின்றாய்??

கந்தப்பு சொன்னார்-நீ

காசைக்கட்டி கனடாவிற்கு

வெளிக்கிட்டு,

ஏமாந்து விட்டாய் என்று- நான்

சொன்னேன்.

அவன் ஏமாறவில்லை.

இங்கு வந்து

நாம்தான் ஏமாந்து

விட்டோம் என்று.

ஆசையில் வெளிக்கிட்டோம் - அந்த

அழகான ஊரை விட்டு.

தோசை சுடுவதர்க்கு - கல்

சூடாவிருக்க வேணும்

என்று அடிக்கடி

அப்பு சொல்வார்- ஆனால்

இங்கு அதே போல்

இல்லாமல்

கல் சூடோ இல்லையோ

தோசை சுடப்புட்டு விடுகிறது.

கல்லை விடத் தோசை

கனமாவிருக்கும்,

சுடுபவர்களின்

மனசைப் போல்- ஏன்

எனில் சுட்டு சுட்டே

அவர்களும் கற்கள்

ஆகிவிட்டனர்.

அனேகம் விறகிற்காய்

நாங்களும் எரிக்கப் படுகிறோம்.

ஆனாலும் தோசை விற்பனைக்கு.

துடிப்பு.


உன்னிடத்தில் உள்ளதை

எனக்குத் தர மறுக்கிறாய் - நான்

கண்ணிமைக்கும் பொழுதில்

காதல் வதைப் படுத்துகிறாய்.

கண் என்பேன்.

மணி என்பேன்.

காதலித்தால்

என்னுயிர் என்பேன்.

பெண் என்பேன்.

மலர் என்பேன்.

பேதை நீ

என் கோவில் என்பேன்.

விண் என்பேன்.

முகில் என்பேன்.

வேதனைக்கு

நீ என் சுகம் என்பேன்.

வண்ண மலர் எடுத்து

வடிவாக

உனைத் தொடுத்து

என்னுயிரில் அதையிட்டு

இணைய மனம் துடிக்கிறது.