
கன்னி மரியே
காலம் எல்லாம் உனை எண்ணி- நான்
இங்கு தனியே.
உன் இதயச்சிலுவையில்
அறையப்பட்ட பின்பும்
யேசுபோல் மீண்டும் என்னால்
உயிர்க்க முடியவில்லை.
ஆப்பு இழுத்த குரங்கு போல்
அகப்பட்டு கொண்டேன் உணக்குள் நான்.
உன்னுள்ளே ஊறியவன் என்பதினால்
என்னும் உனைத் தூக்கியெறியாமல்
துடைத்து துடைத்து வைத்துள்ளேன்.
யார் யாரோ சொன்னார்கள்
உன்னில் செழும்பு பிடித்துள்ளதாய்.
இறுக்கித் துடைத்துவிட்டால்
இது எல்லாம் சரிவரும் என்றேன்.
இது விளக்கு அல்ல வாழ்க்கை என்றனர்.
எனக்கு ஏதும் விளங்கவில்லை
என்று விலத்திக் கொண்டேன்.
பார்த்தனர் யாவரும் எனை ஒரு பரிதாபமாக.
கேட்டனர் சிலர்
தம்பிக்கு என்னதான் குறை என்று???
பட்ட மரத்திற்கு சட்டை போட்டு பார்த்தேன்
ஒரு வெட்டை வெளியில் வைத்து.
பச்சை மரம் ஒன்று சொன்னது
நீ ஒரு பயித்தியக்காரன் என்று.
oru naala annupaavam oru naala kavithai!
ReplyDelete