என் தேசத்து உறவுகளே
நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு
நகரத்தின் குரல் இது
இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே
உயிர்களும் உடல்களும்
நாடு விட்டு நாடு வந்து
கூடு இழந்தவர் நாம் -பெரும்
பாடு பட்டு நாம் வளர்த்த -நல்
தேசியத்தில் பிறந்தவர் நாம்
காடு வெட்டி களனி ஆக்கி -நெற்
சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ
அநாதியற்று இப்புமியிலே
அனாதைகளாகி விட்டோம் - நம்
தேசம் ஒன்றின் விடிவிக்காய்
பாசங்களை தொலைத்தவர் நாம்
கூடு இழந்த குருவிகள் போல் - இத்
தெரு கோடியிலே கதறுகிறோம்
காப்பரும் ஒபாமாவும் என்ன
மகிந்கவின் கைப் பொம்மைகளா...?
சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண்
அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு
வாயிருந்தும் கண்ணிருந்தும் - எம்
வாயடைக்க வைத்து விட்டார்
நாம் கேட்பதென்ன... பொன் மணியா..?
எம் உயிர் கண்மணிகள் வாழ்வதுவே
கண்ணிருந்தும் குருடனைப்போல்
காட்சி தரும் காப்பரும்
ஏதுமே தெரியாமல்
இருக்கின்ற இவ்வுலகும்
காலத்தின் முன்னாலே
கை கட்டி மண்டியிடும்
காலம் வரை காத்திருப்போம் - எம்
கண்ணீர் பெருக்கோடு
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment