Saturday, May 23, 2009

கறுப்பு அழகி

என்னுயிர் கறுப்பழகியே-உன்
கண்ணுக்குள் என்னடி காந்தமா வைத்துள்ளாய்? -நான்
எங்கு எங்கு சென்றாலும் எனை இழுத்த வண்ணம் உள்ளாய்- நீ
பொறுக்கவில்லை உன்னழகால் நான் பைத்தியமாய் ஆகி விட்டேன்
ஒய்யார நடை நடக்க உன் காலில் கீல் அணிந்தாய்-நான்
என்னவோ நினைத்து ஏங்கி விட்டேன் -நீ
எனை விட உயரமோ என்று எண்ணி-உன்
கண்ணில் காதலைத் தான் நான் கண்டேன்-உன்
காலடியைப் பார்க்கவில்லை
கறுப்பாக நீ இருந்தாலும் - எனக்கு
பொறுப்பானவள் நீ தானே - இப்போ
வெறுப்பாக நினைக்கிறேன் - அந்த
வெள்ளை நிறப் பெண்களை நான்

1 comment: