என் உயிர் உறவுகளே
செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல்
நான் துள்ளித் திரிந்த தெருக்களில்
குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம்
தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு
வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்
கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு
சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம்
கண்களில் இருந்த கண்ணிர் வற்றி
நடைப் பிணமாய் நாம் இப்போ........
ஜயகோ....!
தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள்
செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர்
சத்துணவு திட்டமாவது தரும் படி
ஏன், எதற்கு எப்படி யானோம் -?
நாம் இப்படி ................?
கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில்
வராவிடின் தேடுங்கள் - அதற்கான
பதிலைத் தேடுங்கள்
என் துர தேசத்துறவுகளே
ஆயிரம் ஆயிரமாய் அழிக்கப் பட்டவர்கள் - உங்கள்
அக்கா தம்பி அம்மா அப்பா
அயலவர் உறவினர்
கிட்டி அடித்தோம் கிளித்தட்டும் மறித்தோம்
பட்டியில் சுட்டியனைக் கட்டி பால் கறந்து குடித்தோம் - வளவுப்
புட்டியில் பன்ங்கிழங்கு புடுங்கி மகிழ்ந்தோம்
கோவில் திருவிழாவில் கும்மாளம் அடித்தோம்.
காதல் கொண்டோம் -ஆனால்
இவை வேண்டாம் இனிமேலும்
தூக்கு மேடையில் கேட்பது ஒரு கைச் சோறுதான்
எம் பிள்ளைகளின் உயிர் காக்க வேனும் .
ஏதும் அற்ற எதிலீகளாய்
நாயை விடக் கேவலமாய் நாங்கள் உள்ளேம்
கம்பி வேலி காட்டு நரிக் கூட்டம்
சாவுக்காகவே தரப்படும் நஞ்சு உணவு
ஓய்வுறக்கம் இல்ல மன உளைச்சல்
யார் என்று கேள்வி அற்ற மானிடப் பிறப்பாய் நாம் இப்போ
திறந்த நரகச் சிறைக்குள் - பெரும்
சித்திர வதைகளோடு
ஓ..........
என் தேசத்து உறவுகளே
தட்டிக் கேளுங்கள் எம் சாவுக்குள்ளும் - ஓர்
நிம்மதியைத் தரும்படி - எம்
சாவை சகிப்புடன் ஏற்றுக் கொள்வதற்காய்..........
செத்துக் கொண்டேதான் இருக்கிறோம்
தினம் தினம்
சாவு எங்களுக்கு
இப்போ சாதாரண நிகழ்வு தான் - இருந்தும்
சாவிலும் ஒரு நிம்மதிக்காய்
உங்களிடம் கையேந்திக் கொள்கிறோம்
ஏனெனில் இறந்த பின்பும் இவன் தான்
அவனென்று சொல்வதற்காவது இருப்பீர்களே என்பதற்காய்
நாளை மீண்டு நாம் இருப்பின் தொடரும்.........?
Wednesday, May 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment