Monday, September 21, 2009

அறிமுகத்துடன்.


என்றும் என் பிரியசகிக்கு.........!


தேவதையே பிரியசகி..

தேன் மழை தான் உன் கவிதை வரி.

நானும் ஓர் கவிஞ்ஞன் என்று

நாளும் நான் நினைத்திருந்தேன்.

உன்.............

முதல் கவிதை பார்த்தேன். மூச்சடைத்தே போனேன்.

மறுகவிதை பார்த்தேன் மரணித்தே போனேன் - இப்போ

எனக்குள்ளே சிறகடிக்கும் நினைவுகளை

உணக்குள்ளே செரிகிடத்துடிக்கின்றேன் - உன்

செல் அடிக்கும் போதெல்லாம் நான்

புல்லரிதே போனேன்.......!

உன் கவிதைக்கு அழகிருக்கு. அதைக் காதலிக்கும் மனம் எனக்கிருக்கு.

அறிவிருக்கு, நல் அழகிருக்கு, அரவணைக்கும் நல் பண்பிருக்கு,

கருவிருக்கு, கற்பனையிருக்கு, கதையிருக்கு, இசையிருக்கு - உணக்கது

எல்லாமே இணைந்திருக்கு.

ஆனால்...........?????????

என்னோடு இருந்ததெல்லாம் நானும் என் மனதும் தான்.

காகிதப் பூக்கள், கசங்கிய நாட்கள், காதல் கொண்ட நெஞ்சம்,

கறை பட்ட உள்ளம்...........

சோகம் கொண்ட மனது. தூங்கிடாத இரவு.

தாடி வைத்த முகம் தலையணையே வாழ்க்கை.

இப்படியே ஓடி விட்ட என்னுடைய நாட்கள்...............!!!!

கடவுள்.


கடவுளுக்காக நான் கவலைப்படுகின்றேன்.

ஏனெனில் மனிதப் படைப்புக்காய்.

நீ சிந்திக்க முதலே மனிதம் சிஷ்த்தரிக்கப்பட்டது

என்பது உண்மை என்றதை அறிவாய்.

மானிடத்தின் வருகை உணக்கு ஒரு மானக்கேடு.

கடவுள் என்பதர்க்காக நீ கண்ணீர் வடிக்கின்றாய்.

ஏனெனில் அவசரப்பட்டதை அறிய தாமதம் ஆனதர்க்காய்.

உன்னுடைய படைப்புக்குள் ஓரு அர்த்தமற்ற படைப்பு இது.

ஏனெனில் ஏன் இவ்வளவு சுமை, துன்பம், கோபம், கொடூரம்????

இப்படி ஒரு பிறவிக்கு உயிர் கொடுக்க எப்படி உன்னால் இயன்றது???

ஆறு அறிவு என்பது நாய்களுக்கு உண்டு.

ஆனால் மனிதரிடம் நான் கண்டதில்லை.

கடவுள் உண்டு என்று கத்திகொண்டு திரிபவர்களுக்கு

ஓர் மானக் கேடான விடயம் இந்த மானிடப் படைப்பு.

Wednesday, September 16, 2009

வாழ்க்கை.


வாழ்க்கையின் போக்கை என்னால் வரையறுக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டிருந்த சில நிமிடத்தில் அழத்தொடங்கி விடுகிறேன். சிந்த்திக்கத் தொடங்கி விட்டால் திசை மாறிக்கொள்கிறேன்.

இரசிக்கத் தொடங்கிவிட்டால் உணர்ச்சிவசப்படுகிறேன்.

பேசத்தொடங்கி விட்டால் என்னையே மறக்கிறேன்.

வாழ்க்கையின் போக்கில் என்னால் வாழத்தெரியவில்லை.

நேற்று ஓர் நிரந்தர முடிவு. இன்று அது எப்படி அந்தரம் ஆனது???

வாழ்க்கைப் புத்தக வடிவத்தில் எத்தனை வதை பாடுகள்??

பிறப்பை எண்ணி வேதனைப்படுகின்றேன்.

ஓர் இறப்புக்காக எமது இயக்கம் என்று.

காதலை எண்ணிக் கவலைப் படுகின்றேன்.

ஏனெனில் பிரிவிற்காக இந்த இன்ப வேதனை என்று.

அன்புக்காக ஏங்கிய பொழுது அரவணைக்கத் தெரியாத உறவுகள்.

எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை????

பூமிச்சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது எனது வாழ்க்கையும்.

வாழ்க்கைப் பயணத்தில் திசை தெரியாமல் நான்........

பொய்


புதிய சந்திப்புக்கள்,

புதுமையான மனப்பகிர்வு,

இளமை அனுபவங்கள்,

இன்பக் கைகலப்பு,

காலத்தின் இணைப்பு,

காதலின் சிறப்பு,

இதயத்தின் வருடல்,

இன்பத்தின் வருகை,

தேடலின் முடிவு,

விடியலின் தொடக்கம்,

செப்பனிட்ட நட்பு,

தெவிட்டாத பேச்சு,

நேரத்தின் அழைப்பு,

நின்மதியின் கலைப்பு,

இதுவெல்லாம் என்ன

எம்முடைய இணைப்பு.

சிந்திக்கச் செய்கின்ற,

சின்னம் சிறிய நிமிடம்,

கண்கள் கலந்து கொள்ளும் போதும்

மனங்கள் ஒருமிக்கும் போதும்

நட்பு என்பது நகரத் தொடங்குகிறது.

கடவுளினால் இணைக்கப்பட்டது காதல் ஆகிறது.

காமத்தால் இணைக்கப்பட்டது

வெறும் குளிர் காய்தல் ஆகிறது.

நேற்றைய சந்திப்பு அது இன்றைய காதல்.

நாளை மீண்டும் என்னுமோர் புது நகர்வு.

நானும்+நீயும்=யாரோ ஆனோம்.

மனம்.


மனிதனிடையே தோன்றும் ஓர் மகத்தான அம்சம் காதல். அந்தக் காதல் சிலவேளைகளில் எம் சிந்தனைகளை சிதறடித்துவிடும். ஏனெனில் மனித மனங்கள் என்பது நிரந்தரமான ஒன்றல்ல. அங்கலாய்ப்புக்கள் நிறைந்த அசிங்கமான ஒன்று. உணக்கு நான் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். நீயோ இன்னொருவனுக்கு நானன்று வாழ்ந்து கொண்டிருப்பாய். மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. நான் எங்கோ முட்டி மோதிக்கொண்டிருப்பேன். நீ கைதட்டி கேலி செய்வாய். ஏனெனில் உனது வாழ்க்கை முறை. சமூக மாற்றம், புதிய சந்திப்புக்கள், என்னில் இருந்து உன்னை எங்கோ இழுத்துச் செல்லும். எனது மனத்திடையே நீ, உணக்கிடையில் நான், என்பதெல்லாம் வெறும் கனவு. ஏனெனில் கால ஓட்டத்தில் குளிப்பவள் நீ.நானோ கடந்து வந்த பாதையை நினைப்பவன். எப்படி எம்மால் இன்னுமொரு புதுப்பிறப்பு?? சிந்திக்கிறேன் சிரிப்புடன் நான்.........

Monday, September 14, 2009

எப்படி முடியும்.


காலத்தின் கட்டாயத்தினால்

கலக்கப் பட்டவர்கள் நாங்கள்.

நீ நினைத்திருக்க முடியாது,

இப்படி ஒருவன் இருப்பான் என்று.

ஏன் நான் கூட நினைத்ததில்லை.

இப்படி ஒரு நீ இருப்பாய் என்று.

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை இந்த இணைப்பை.

ஏனெனில் மனதுக்குள் மாட்டியுள்ள

அந்த மறைந்திருக்கும் உருவத்தை

என்னும் என்னால் மறக்க முடியவில்லை.

பின்பு ஏன் என்னுமொரு

கால இணைப்புக்குள் நான்????

செத்தவனுக்கு

மீண்டும் ஏன் வாழ்க்கைத் துடிப்பு??

உனது அழகான அந்த வருடலுக்கு

நான் வசப்பட்டுக்

கொண்டது உண்மை தான். - ஆனால்

பயமாகவிருக்கிறது.

மீண்டும் ஓர் பயணத்தை தொடர்வதற்கு.

ஏனெனில் எனக்குள்

என்னுமொரு உயிர் தவிப்பு.

உன் உள்ளத்தில் உள்ள

உண்மையான உறவு எனக்கு

உன்னதம் தருவதாய் இருந்தும்,,,

மனம் இம்சை படுகிறது.

ஏனெனில் அது ஒன்று தானே

எப்போதும் என்னோடு இருப்பது.

காலத்தின் இணைப்பில் நீ

இணைவாய் பின்

கட்டாயத்தின் பெயரில் நீ பிரிவாய்.

எப்படி என்னால்

என்னுமோர் கால இணைப்பில்.....??????

உறவு.


என்றும் என் அன்பானவளுக்கு,

உனது அன்பான அந்த வருடல்

என்னை உன்னில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

எனது மனத்திடையே நீ இப்போ.

எப்படி உன்னால் இது இயன்றது????

காதலைக் கத்தரித்துக் கொண்டவனுக்கு

மீண்டும் ஒரு கலர் கனவு.

சிரித்துக் கொள்கிறேன்....

தெரியவில்லை ஏன் என்று???

சில வேளைகளில் அழுது கொள்கின்றேன்

ஆனால் கண்ணீர் வருவதில்லை.

நினைத்துக்கொள்கின்றேன்

நீ இல்லாத அந்த நிமிடத்தை.

உனது உடல் அழகில் நான் மயங்கவில்லை.

உன் அரவணைப்புக்காய் நான் தவிக்கவில்லை.

காதலித்துக்கொள்

என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.

அப்படியானால்

எப்படி இது சாத்தியமானது????

காதலித்துக் கொள்ளவில்லை.....????

கைகள் பட்டதில்லை.......????

கண்கள் கலக்கவில்லை........????

ஆனால் இது கனவும் இல்லை.

எம்மிடையே என்ன உறவு இது?????